கோவை மாநகர ஆயுதப்படை காவலர்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை ஆயுதப்படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில், பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், கோவை மாநகர ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த அணிவகுப்பின் போது, காவலர்களுக்கு உடற்பயிற்சிகள், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துதல், உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகள், அணிவகுப்பு முறைகள் ஆகியவை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதனை மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் நேரில் பார்வையிட்டார்.
மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில், பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், கோவை மாநகர ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பின் போது, காவலர்களுக்கு உடற்பயிற்சிகள், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துதல், உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகள், அணிவகுப்பு முறைகள் ஆகியவை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதனை மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் நேரில் பார்வையிட்டார்.