கோனியம்மன் கோவில் தேர் ஊர்வலத்தை முன்னிட்டு இன்று தற்காலிக போக்குவரத்து மாற்றம்

கோனியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று பிற்பகல் 2 மணியளவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

1. அவிநாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து கூட்செட் ரொடு வழியாக வரும் அனைத்து வாகனங்களும் பெரிய கடை வீதி, வின்சென்ட்ரோடு வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2. பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அல்லது பேரூர் பைபாஸ் சாலையில் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

3. மேட்டுப்பாளையம் சாலை, சுக்கரவார்பேட்டை பூமார்க்கெட் மற்றும் புருக்பாண்டு சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பழைய மேம்பாலம் வழியாக கூட்செட்ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

4. பொள்ளாச்சி சாலையிலிருந்து திருச்சி மற்றும் காந்திபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் பைபாஸ் சாலை வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு மற்றும் ரயில் நிலையம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

5. தடாகம் சாலையிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையாராஜபுரம், சொக்கம்புதூர், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ்ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

6. பேரூர் சாலையில் வரும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதூர், பொன்னையாராஜபுரம், தடாகம் சாலை வழியாக காந்திபார்க் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

மேலும் அன்றைய தினம் லாரிப் போக்குவரத்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நகருக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வரும் சாலையிலுள்ள அனைத்து கடை உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களை தேர்வரும் சாலையில் நிறுத்தாமல் மாற்று இடத்தில் நிறுத்த வேண்டும். 

பொது மக்களும், வாகன ஓட்டிகளும் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...