கோவை போத்தனூர் அருகே உள்ள மகாலிங்கபுரத்தில் குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் தலையில் கல்லைப்போட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனோஜ்மேனன் என்ற ஓட்டுநரை கைது செய்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை போத்தனூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்மேனன். கார் ஓட்டுநரான இவர் இரவு நேரங்களில் தனது வீட்டின் மாடியில் நண்பர்களுடன் மது அருந்துவது வழக்கம்.
இவர் நேற்று இரவு கட்டிட தொழிலாளியான சித்தேஸ்வரன் என்பவரை அழைத்துக்கொண்டு வந்து வீட்டின் மாடியில் மது அருந்தியுள்ளார். மதுபோதையில் நண்பர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது மனோஜ்மேனன் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து சித்தேஸ்வரன் தலையில் போட்டத்தில் சித்தேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய மனோஜ்மேனன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் சம்பவத்தை சொல்லி சரணடைத்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சித்தேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி நேரில் பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை தொடர்பாக போத்தனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை போத்தனூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்மேனன். கார் ஓட்டுநரான இவர் இரவு நேரங்களில் தனது வீட்டின் மாடியில் நண்பர்களுடன் மது அருந்துவது வழக்கம்.
இவர் நேற்று இரவு கட்டிட தொழிலாளியான சித்தேஸ்வரன் என்பவரை அழைத்துக்கொண்டு வந்து வீட்டின் மாடியில் மது அருந்தியுள்ளார். மதுபோதையில் நண்பர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது மனோஜ்மேனன் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து சித்தேஸ்வரன் தலையில் போட்டத்தில் சித்தேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய மனோஜ்மேனன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் சம்பவத்தை சொல்லி சரணடைத்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சித்தேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி நேரில் பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை தொடர்பாக போத்தனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.