திருப்பூரில் கோவிலில் நகைகள் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை கொண்டு வடமாநிலத்தவரை கைது செய்த போலீஸ்!

திருப்பூர் அடுத்த செவந்தாம்பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் உண்டியல் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தி விசாரணையில், ஜீவா நகரில் வசித்து வந்த வடமாநில நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அடுத்த செவந்தாம்பாளையம் அருகே கோவில் நகைகளை திருடிச்சென்ற வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் செவந்தாம்பாளையம் பகுதியில் மாகாளியம்மன் திருக்கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் நேற்று இரவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், இன்று காலை கோவிலுக்கு சென்ற பொதுமக்கள், அங்கு கோவில் பூட்டு உடைக்கப்பட்டும், அறையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது சாமி கழுத்தில் இருந்த 12 பவுன் நகை மற்றும் கோவில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.



தொடர்ந்து, அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அதே பகுதியை சேர்ந்த ஜீவா நகரில் வசித்து வந்த வடமாநிலத்தவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக வடமாநில நபரை கைது செய்த போலீசார், நல்லூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...