பொது இ-சேவை மையத்தில் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெறலாம் என ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் வண்ணப்புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பிளாஸ்டிக் ஆதார்கார்டு போன்றவற்றை பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக மக்கள் சிரமமின்றி எளிதாக சான்றிதழ்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதே பொது இ-சேவை மையமாகும். இந்த திட்டம் அனைத்து வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் 231 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், 1,38,995 சாதிச் சான்றிதழ்களும், 1,82,037 வருமான சான்றிதழ்கள், 6,67,93 இருப்பிட சான்றிதழ், 10405 முதல்பட்டதாரி சான்றிதழ், 61 கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ், 33,239 பட்டா மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திருமண உதவித்தொகை விண்ணப்பித்தல், 2 பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தல், மின்கட்டணம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை எடுத்தல் போன்ற பல்வேறு வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தற்போது வண்ணப்புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளும் ரூ.50 கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை உள்ள பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரிவித்து வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையாக புதுப்பித்துக்கொள்ளலாம்.

மேலும், இச்சேவை மையங்களிலேயே ஏற்கனவே ஆதார் எண் உள்ளவர்கள் புதிய ஆதார் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்" என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...