வால்பாறையில் திமுக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வால்பாறையில் உள்ள அண்ணா திடலில் நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக மாணவரணி துணைச் செயலாளர் ஜெ.வீரமணி ராஜ்குமார் மற்றும் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கோவை: வால்பாறையில் திமுக ஆட்சி இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுகவின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அண்ணா திடலில் நடைபெற்றது.



இதில் சிறப்புரை பேச்சாளராக மாணவரணி துணைச் செயலாளர் ஜெ வீரமணி ராஜ்குமார் மற்றும் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்கள் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு சுமார் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது. வால்பாறையில் பத்தாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சிப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் 90% செயல்படுத்தப்பட்டுள்ளது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425 ரூபாய் விரைவில் வழங்கப்படும்.

மேலும் மற்ற நகரங்களில் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிப்பது போல் வால்பாறை பகுதியிலும் விரைவில் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க வலியுறுத்தப்படும் அஎன்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...