மாசுபடும் நீர்நிலைகளை பாதுகாத்திடுக..! - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

கோவையில் மாசுபடும் நொய்யல் நதி உள்ளிட்ட நீர் நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் இரு தினங்களுக்கு முன்பு நொய்யல் நதியில் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டதால் கழிவு நுரை ததும்ப நொய்யல் நதி காட்சியளித்தது.

இதனையடுத்து சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலரும் நொய்யல் நதியை பாதுகாக்க வேண்டும் எனவும் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், நொய்யல் நதி உட்பட நீர்நிலைகள் மாசுபடுவதை பாதுகாக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தை இன்று நடத்தினர்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி தலைமையிலான விவசாயிகள், மாசுபட்ட நீரை பாட்டிலில் எடுத்து வந்ததோடு,மாசடைந்த நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.



பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தக் கோரிக்கை தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.

அதில், நொய்யல் நதி மற்றும் வாய்க்கால்களுக்கு ஆதரவாக உள்ள கிளை வாய்க்கால்களில் உள்ள முற்புதர்களை முறையாக தூர்வார வேண்டும், நீர்நிலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, செய்யப்படும் திட்டங்கள் குறித்தும் தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், நீர் நிலைகளை மாசுபடுத்தும் நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதுடன், தொடர்புடைய நபர்கள் மீதுகிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...