மாசற்ற காற்றை சுவாசிக்க மரம் நடுங்கள்..! - கோவையில் ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி விழிப்புணர்வு

கோவையில் மரம் நடும் திட்டத்தை வலியுறுத்தும் வகையில்  வ.உ.சி சேவா அறக்கட்டளை சார்பில் மாதிரி ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி நூதன முறையில் விழிப்புணர்வு பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த வ.உ.சி சேவா அறக்கட்டளையினர் ஒரே ஒரு மரம் நடுவோம் நாளைய தலைமுறை காப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் மாதிரி ஆக்சிஜன் சிலிண்டரை அணிந்தவாறு விழிப்புணர்வை தொடங்கியுள்ளனர்.

அடுத்த தலைமுறை மாசற்ற காற்றை சுவாசிப்பதை உறுதி செய்யும் வகையிலும், காற்றை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும் மாதிரி ஆக்ஸிஜன் சிலிண்டரை அணிந்தவாறு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.



அதன்படி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதிரி ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் பொருத்தியவாறு பதாகைகளை ஏந்தி வ.உ.சி. சேவா அறக்கட்டளையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது குறித்துப் பேசிய அவர்கள்,இனி வரும் நாட்களில் இது போன்ற விழிப்புணர்வை வாரம் தோறும் பல்வேறு இடங்களில் முன்னெடுக்க உள்ளோம்.சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களை வெட்டினால், அதற்கு ஈடாக கூடுதல் மரங்களை வேறு இடங்களில் வளர்க்க வேண்டும். அரசாங்கம் மட்டும் இல்லாமல் பொதுமக்களும் தாமாக முன்வந்து மரங்களை வளர்க்க வேண்டும், என்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வ.உ.சி சேவா அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி முத்துவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...