உலக தலசீமியா தினம் - கோவையில் மருத்துவ வசதிகள் கோரி ரோஜா பூக்களுடன் மனு

கோவையில் தலசீமியா தினத்தை முன்னிட்டு தலசீமியா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தக் கோரியும், அவர்களுக்கான ரத்த பரிமாற்றத்திற்கும் உரிய வசதிகளை ஏற்படுத்த கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் ரோஜா பூக்களுடன் பரிந்துரை மனு அளிக்கப்பட்டது.


கோவை: தலசீமியா நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ வசதியை ஏற்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சர்வதேச அளவிலான தலசீமியா இன்று கடைபிடிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.



இந்நிலையில் தங்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த கூறி இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ரோஜா மலருடன் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ரத்த பரிமாற்றத்திற்கான ஏற்பாடுகளை கோவையில் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.



அதனை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். Iron reducing medicines என கூறப்படும் Desirox, Desferal, Kelfer, Fesasiro போன்ற மருந்துகளை போதுமான அளவில் இருப்பில் வைக்கும் வகையிலும், அவற்றை மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் அந்த மருந்துகள் இருப்பு இருப்பதில்லை என்பதால் தனியார் மருத்துவமனைகளை நாடி செலவு செய்யும் அளவிற்கு வசதி இல்லாதவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

இதனால், மாவட்ட ஆட்சியர் தங்களது கண்காணிப்பிலேயே இந்த மருந்துகளை கட்டுப்பாட்டில் வைத்து உதவிட வேண்டும். மேலும் ரத்தப் பரிமாற்றத்தின் போது Blood Leukocyte Depletion எனப்படும் சுத்திகரிப்பானையும் மாவட்ட ஆட்சியர் தங்களது நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலசீமியாவுக்காக அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒன்றை உருவாக்க வேண்டும். ரத்த தானம் குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...