உலக தலசீமியா தினம் - கோவையில் மருத்துவ வசதிகள் கோரி ரோஜா பூக்களுடன் மனு

கோவையில் தலசீமியா தினத்தை முன்னிட்டு தலசீமியா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தக் கோரியும், அவர்களுக்கான ரத்த பரிமாற்றத்திற்கும் உரிய வசதிகளை ஏற்படுத்த கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் ரோஜா பூக்களுடன் பரிந்துரை மனு அளிக்கப்பட்டது.


கோவை: தலசீமியா நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ வசதியை ஏற்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சர்வதேச அளவிலான தலசீமியா இன்று கடைபிடிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.



இந்நிலையில் தங்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த கூறி இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ரோஜா மலருடன் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ரத்த பரிமாற்றத்திற்கான ஏற்பாடுகளை கோவையில் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.



அதனை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். Iron reducing medicines என கூறப்படும் Desirox, Desferal, Kelfer, Fesasiro போன்ற மருந்துகளை போதுமான அளவில் இருப்பில் வைக்கும் வகையிலும், அவற்றை மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் அந்த மருந்துகள் இருப்பு இருப்பதில்லை என்பதால் தனியார் மருத்துவமனைகளை நாடி செலவு செய்யும் அளவிற்கு வசதி இல்லாதவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

இதனால், மாவட்ட ஆட்சியர் தங்களது கண்காணிப்பிலேயே இந்த மருந்துகளை கட்டுப்பாட்டில் வைத்து உதவிட வேண்டும். மேலும் ரத்தப் பரிமாற்றத்தின் போது Blood Leukocyte Depletion எனப்படும் சுத்திகரிப்பானையும் மாவட்ட ஆட்சியர் தங்களது நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலசீமியாவுக்காக அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒன்றை உருவாக்க வேண்டும். ரத்த தானம் குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...