தீண்டாமை சுவற்றை அகற்ற கோரி திருப்பூரில் பொதுமக்கள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள அருந்ததியர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: தீண்டாமை சுவரை அகற்ற கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டையங்கிணறு ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நிலத்தினை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகிறது.

விற்பனை செய்யும் வீட்டு மனைகளை ஒட்டி தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் மக்கள் வசிப்பதால் வீட்டு மனைகளை விற்பனை செய்ய முடியாது என எண்ணி அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியை ஒட்டி சுமார் 10 அடி உயரம் வரை சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் சுவரை ஒட்டி சாக்கடை தண்ணீர் மற்றும் மரம் செடிகள் வைத்து அதற்கும் தண்ணீர் அதிகமாக ஊற்றி வருவதால், அருந்ததியினர் மக்கள் வசிக்கும் பகுதி களிமண் பூமி என்பதால் தண்ணீரின் ஈரம் பட்டு 20க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் விட்டு இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.



எனவே மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு தீண்டாமை சுவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...