கோவையில் பொறியியல் பட்டதாரியை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு - இருவர் கைது!

கோவை மீனா எஸ்டேட் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன்கள் மற்றும் ரூ.50,000 பணத்தை பறித்துச் சென்ற தூத்துக்குடியை சேர்ந்த விஸ்வா (19), ராமநாதபுரத்தை சேர்ந்த நீலகண்டன் (19) ஆகியோரை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து செல்போன்கள் மற்றும் ரூ.50,000 பணத்தை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் (21). பொறியியல் பட்டதாரியான இவர், தனது தோழியின் பிறந்தநாள் விழாவிற்காக கோவையில் உள்ள மீனா எஸ்டேட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி தோழிக்கு பிறந்தநாள் என்பதால் பிரவீன் குமார், அவரது அறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் மறுநாள் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக பிரவீன் குமார் தனது தோழியின் அறையிலேயே தங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நள்ளிரவில், 4 பேர் கொண்ட கும்பல் இவர்களது அறைக்குள் அத்துமீறி நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.50,000 பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பிரவீன் குமார், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற தூத்துக்குடியை சேர்ந்த விஸ்வா (19) மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீலகண்டன் (19) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள கஸ்தூரி ரங்கன், கருப்பு என்கிற தினேஷ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...