கோத்தகிரியில் கஞ்சா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கோத்தகிரி அருகே உள்ள கெரடா மற்றும் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கஞ்சா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் போலீசார் கஞ்சா பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.


நீலகிரி: கோத்தகிரி பேருந்து நிலையத்தில் கஞ்சா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோத்தகிரி அருகே உள்ள கெரடா மற்றும் கோத்தகிரி பஸ் நிலையத்தில் கஞ்சா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னெடுக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளார்.

கஞ்சா போதை குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். இதன் அடிப்படையில் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் கோத்தகிரி நகர் பகுதி மற்றும் கெரடா கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை வழங்கினர். இந்த நிகழ்வில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி, கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான்கான், யாதவ்கிருஷ்ணன் மற்றும் கோத்தகிரி போலீசார்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...