வால்பாறை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ஐயப்பசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக திருவிழா இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள ஐயப்பசுவாமி கோவில் கும்பாபிஷேக திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
வால்பாறை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் ஐயப்ப சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா இன்றைய தினம் கோலாகலமாக துவங்கியது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை மகாகணபதி ஹோமம், அதிவாஸபூஜை மற்றும் பரிகலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ துர்க்கையம்மன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் பிரம்மகலசாபிஷேக கும்பாபிஷேகம் சபரிமலை, பம்பை ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வந்த புனிதத்தீர்த்தங்களுடன் நடைபெற்றது.
வெகுசிறப்பாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு அனைவருக்கும் மாபெரும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவைத் தொடர்ந்து 41 நாள் மண்டலபூஜை நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டிகளும், திருவிழா கமிட்டிகளும் செய்து வருகின்றனர்.