துடியலூரில் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கோவை மாவட்டம் துடியலூர் பகுதிக்கழக திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பகுதிக்கழக பிரதிநிதிகள் பங்கேற்று திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில், திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.



துடியலூர் பகுதிக்கழக திமுக செயலாளர் அருள்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 1வது வட்ட செயலாளர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்றார்.

முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் வெ.நா.பழனியப்பன், மூத்த வழக்கறிஞர் அருள்மொழி, பகுதி அவைத்தலைவர் பழனிசாமி, துணை செயலாளர்கள் சண்முகசுந்தரம், குமார், ஐ.டி. பகுதி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், மாவட்ட பிரதிநிதிகள் சதீஸ்குமார், சோமசுந்தரம், தன்ராஜ், சம்பத்குமார், அருண்குமார், 2, 13, 14, 15 வட்ட கழக செயலாளர்கள் சண்முகம், சுந்தரம், சோமசுந்தரம், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திமுக தலைமை கழகப் பேச்சாளர் உடுமலை தண்டபாணி கலந்துக் கொண்டு திமுக 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 1வது மாமன்ற உறுப்பினர் கற்பகம், 2வது மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி, மதிமுகவை சேர்ந்த 14வது மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல், பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல்சாமி உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், துணை அமைப்பாளர்கள், 1, 2, 13, 14, 15 வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...