கோவை மதுக்கரை ரயில்வே தண்டவாளம் அருகே இளைஞர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

கோவை சுந்தராபுரம் - மதுக்கரை இடையே உள்ள மோகன் நகர் ரயில்வே தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இறந்தவர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த வினித் என்கிற ஆசிப் பிரிட்டோஸ் (22) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: மதுக்கரை அடுத்த மோகன் நகர் ரயில்வே தண்டவாளத்தில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் - மதுக்கரை இடையே மோகன் நகர் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே அழுகிய நிலையில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் ரயில்வே காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சடலமாக கிடந்த வாலிபர் இறந்து சுமார் 3 நாட்களுக்கு மேல் ஆனது தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் கோவை குனியமுத்தூர் மயில்கல் பகுதியை சேர்ந்த வினித் என்கிற ஆசிப் பிரிட்டோஸ் (22) என்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய வினித்தை வீட்டிலிருந்தவர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து வினித் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினித் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...