கோவை சரக டிஐஜி அலுவலகத்திற்கு பெண் ஆய்வாளர் ஒருவர் மீது பொய் புகார் அளிக்க வந்த 2 பெண்களை டிஐஜி விஜயகுமார் எச்சரித்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ஆய்வாளரை அலுவலகத்திற்கு வரவழைத்து டிஐஜி விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார்.
கோவை: கோவை ரெட் பீல்ட் பகுதியில் உள்ள கோவை சரக டிஐஜி அலுவலகத்திற்கு நேற்று இரண்டு பெண்கள் புகார் அளிக்க வந்தனர்.
அந்தப் புகார் மனுவில் பெண் ஆய்வாளர் ஒருவர், பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தனர். அந்த மனுவை பார்த்த டிஐஜி விஜயகுமார், அந்தப் பெண் ஆய்வாளரை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்.
அதில், அந்த பெண்கள் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அது குறித்து ஆய்வாளர் எச்சரித்ததால் அவர் மீது புகார் அளிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, டிஐஜி விஜயகுமார் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.
அந்தப் புகார் மனுவில் பெண் ஆய்வாளர் ஒருவர், பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தனர். அந்த மனுவை பார்த்த டிஐஜி விஜயகுமார், அந்தப் பெண் ஆய்வாளரை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்.
அதில், அந்த பெண்கள் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அது குறித்து ஆய்வாளர் எச்சரித்ததால் அவர் மீது புகார் அளிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, டிஐஜி விஜயகுமார் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.