கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோணியம்மன் கோவில் டவுண்ஹால் பகுதி பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியோடு துவங்கியது.
பின்னர் பிப்ரவரி 21ம் தேதி கொடியேற்று விழாவும், பிப்ரவரி 26ம் தேதி திருவிளக்கு வழிபாடும் நடத்தப்பட்டு நேற்று திருகல்யாண உற்சவமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுனன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் இருந்து துவங்கிய தேரோட்ட நிகழ்ச்சியானது ஓப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர்நிலை திடலை அடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
கோனியம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்றும் வழக்கம் போல் இந்த ஆண்டும் தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்து இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
பின்னர் பிப்ரவரி 21ம் தேதி கொடியேற்று விழாவும், பிப்ரவரி 26ம் தேதி திருவிளக்கு வழிபாடும் நடத்தப்பட்டு நேற்று திருகல்யாண உற்சவமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுனன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் இருந்து துவங்கிய தேரோட்ட நிகழ்ச்சியானது ஓப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர்நிலை திடலை அடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
கோனியம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்றும் வழக்கம் போல் இந்த ஆண்டும் தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்து இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.