பல்லடம் அருகே வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை!

பல்லடம் அருகேயுள்ள அல்லாபுரம் பகுதியில் ராஜேந்திர பிரசாத் என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார், மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அல்லாபுரம் செல்லும் சாலையில் உள்ளது ராயல்பார்க் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (64). இவர் தனது மனைவி வரலட்சுமி (63) உடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பாலவிஜய் டென்மார்க் நாட்டிலும் மற்றும் மகள் நிவேதா பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜேந்திரபிரசாத் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்த நிலையில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள முசிறிக்கு நேற்று காலை (10.04.2023) வீட்டை பூட்டிவிட்டு இருவரும் காரில் சென்றுள்ளனர்.



நிகழ்ச்சி முடிந்து இன்று காலை ராஜேந்திர பிரசாத் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.



தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 சவரன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளை சம்பவம் பல்லடம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்டு தப்பிஓடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...