சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்ச்சி விகிதத்தில் 3ம் இடம் பிடித்த சென்னை மண்டலம்!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மற்றும் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. 12-ம் வகுப்பில் 87.33 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பில் 93.12 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மண்டலம் தேர்ச்சி விழுக்காட்டில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.


மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்றது.

இதேபோல் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ-மாணவியர் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில், தேர்வெழுதிய மாணவ-மாணவியரில் 87.33 சதவிகிதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வில் 97.40 சதவிகித மாணவ, மாணவிகளின் தேர்ச்சியைப் பெற்று சென்னை மண்டலம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர் தங்களது தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதில், 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்திலும், 99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடத்திலும் உள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி, 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியர் பற்றிய விவரங்களை வெளியிடப்படவில்லை. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...