பல்லடம் அருகே பங்காளி சண்டைக்கு பலியான பனை மரங்கள் - போலீசாரை கண்டித்து நூதனப் போராட்டம்!

பல்லடம் அருகே கள்ளம்பாளையம் கிராமத்தில் பங்காளி சண்டையில் 36 பனை மரங்கள் இரவோடு இரவாக தோண்டி வீசப்பட்ட விவகாரத்தில், நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து பனை மரங்களுக்கு மலர் தூவி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு கள்ளம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மனைவி மரகதம். மரகதத்தின் பெயரில் நாலரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. மரகதத்தின் மகன் வடிவேல் இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இதில் சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த 40 பனை மரங்களையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில், மரகதத்திற்கு சொந்தமான நிலத்திற்கு நடுவே, அருகில் உள்ள அவரது அண்ணன் ஆறுமுகம் மற்றும் அவரது மகன்கள் பயன்படுத்தக்கூடிய பொது வழித்தடம் அமைந்துள்ளது.



இந்த பொது வழித்தடத்தை அகலப்படுத்துவதற்காக ஆறுமுகம் மற்றும் அவரது மகன்கள் சிவசங்கர், சுப்பிரமணி மற்றும் யுவராஜ் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கடந்த மே 6ஆம் தேதி அன்று முன்பு இரவு 11 மணி அளவில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு 80 ஆண்டுகள் பழமையான 36 பனை மரங்களையும் வேரோடு பிடுங்கி எறிந்தனர்.

தனது வீட்டில் இருந்து தோட்டத்திற்குச் சென்ற வடிவேல், பனை மரங்கள் முழுவதுமாக வேரோடு தோண்டி வீசப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஆறுமுகம் மற்றும் அவரது மகன்களிடம் கேட்டபோது, நாங்கள் அப்படித்தான் செய்வோம் நீ எங்கு வேண்டுமானாலும் புகார் கொடு என பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் வடிவேல் புகார் அளித்த நிலையில், விசாரணை மேற்கொண்ட போலீசார் பனை மரங்களை தோண்டி வீசிய சிவசங்கர் மற்றும் யுவராஜ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் காவல்துறையினர் பனை மரங்களை தோண்டி வீசிய நபர்கள் மீது சாதாரண வழக்கு மட்டும் பதிவு செய்து குற்றவாளிகளை தப்பிக்க வைத்ததாகவும்,



ஜேசிபி இயந்திரங்கள் இன்று வரை பறிமுதல் செய்யப்படவில்லை எனவும் கூறி இன்று பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்தினர் பலியான பனை மரங்களுக்கு மலர் தூவி, பனை மரங்களை அழிக்காதே என்ற பதாகைகளை ஏந்தியபடி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பனை மரங்களை தோண்டி வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் எனவும், 40 பனை மரங்களை தோண்டிய நபர்களையே 400 பனை மரங்களை நட வைக்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...