கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி - வால்பாறையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



கோவை: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.



இந்நிலையில், வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.



இந்த நிகழ்வில், நகரச்செயலாளர் கலைவாணன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.வி.பேபி நிர்வாகிகள் பிரபாகரன், யூ.கருப்பையா, குசலவன், அலி,சோடாசெந்தில், சிவலிங்கம், டாக்டர் பவுலோஸ், சண்முகவேல் ஆகியோர் முன்னிலையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அலி, அசீஸ், ரஹ்மான்,செபீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...