வால்பாறை அருகே காட்டு யானை விரட்டியதில் கீழே விழுந்து பெண் படுகாயம்!

வால்பாறை அருகே உள்ள பிலண்டிவேலி எஸ்டேட் பகுதியை சேர்ந்த அமராவதி என்ற பெண் கடைவீதிக்கு சென்று திரும்பிய போது காட்டு யானை விரட்டியதில் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: வால்பாறை அருகே காட்டு யானை விரட்டியதில் தடுக்கி விழுந்து பெண் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகே பிலண்டிவேலி எஸ்டேட் பகுதி உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும் சின்னசாமி (57) என்பவரது மனைவி அமராவதி (47) ஆகியோரும் குடியிருந்து வருகின்றனர்.

இதனிடையே இன்று காலை 7 மணி அளவில் வீட்டில் இருந்து கடை வீதிக்கு சென்ற அமராவதி தனது உறவினர்களை அழைத்து மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை இவர்களை விரட்டியது.

யானையை பார்த்து அனைவரும் அலறியடித்து ஓடிய நிலையில் அமராவதி ஒட முடியாமல் தடுக்கி கீழே விழுந்து உள்ளார்.

இதில் அவருக்கு கை, கால், தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் எஸ்டேட் வாகனத்தில் வால்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே தகவல் அறிந்து வந்த வால்பாறை வனச்சராக வனத்துறையினர் யானையை வனப்பகுதியில் இருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...