கேஎம்சிஎச்-யில் நரம்பு இடையீட்டு மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்கும் இரண்டாவது ஆண்டு மாநாடு துவக்கம்

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கேஎம்சிஎச்) நரம்பியல் மருத்துவர்கள் சமீப ஆண்டுகளாக ரேடியோலஜி தொழில்நுட்ப இடையீட்டு மருத்துவ முறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு ரேடியோலஜி இடையீட்டுத் துறையும் மாறி வருகின்றன.

குறைந்த அளவு கருவிகளைக் கொண்டு அதிநவீன நரம்பு இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொள்ள, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், மருந்துகள் போன்றவையும் சமீபகாலத்தில் சுலபமாக கிடைக்கின்றன.

உலக அளவில் நிபுணர்கள் மேற்கொள்ளப்படும் நரம்பு மருத்துவ இடையீட்டு கதிர்வீச்சு மருத்துவ துறைமாறி வரும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப தகவல்களை அறிந்தும், அறிந்தவற்றை பிற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொண்டும் சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

இவற்றை இயக்கி வரும் கதிர்வீச்சியல் மற்றும் இடையீட்டியல்துறை தலைவர் மருத்துவர் மாத்யு செரியன், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் மார்ச் 2 முதல் மார்ச் 4, 2017 வரை நரம்பு பாதிப்பு சிகிச்சை சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாட்டினை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சர்வதேச மாநாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ருஸ் பல்கலைக கழக மருத்துவ மையம் மருத்துவர் டெமட்ரியஸ் லேபேஜ், மருத்துவர் டொனால்ட் பிரான்சிஸ் டென்வர், இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் எடராடோபொகார்டி, கனடாவைச் சேர்ந்த மருத்துவர் மயன்க்கோயல், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் மைக்கல் மாவாட், துருக்கியைச் சேர்ந்த மருத்துவர் நாசி கோசர், ஜெர்மனி சேர்ந்த மருத்துவர் ரெனே சாபட், மருத்துவர் ஹான்ஸ் ஹென்கஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவர்களுடன் நரம்பியல் கதிவீர்ச்சில் நிபுணத்துவம் பெற்ற 50 இந்திய மருத்துவர்கள், நரம்பியல் பிரிவு விரிவுரையாளர்கள், பங்கேற்று பயிற்சியும் கருத்தரங்களையும் நடத்தவுள்ளனர். 

நியுரோ இன்டர்வென்ஷன் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சு துறையின் தலைவர் மருத்துவர் மேத்யு செரியன், இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளராக பொறுப்பேற்று நடத்துகிறார். 

இந்த ஆண்டு மாநாட்டின் துவக்க நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்கும் இத்தாலி, மிலன் நகரில் இருந்து வரும் மருத்துவர் எடராடோபொகார்டி, சர்வதேச அளவிலான விரிவுரை வழங்குகிறார். இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் கற்றுத்தேர்ந்த அனுபவசாலி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...