சொத்துகளை விற்றுவிட்டு கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் - திருப்பூர் ஆட்சியரிடம் மூதாட்டி மனு!

சொத்துகளை விற்றுவிட்டு தன்னை கவனிக்காமல் தனியாக விட்டுச் சென்ற மகன் மற்றும் மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 80வயது மூதாட்டி ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


திருப்பூர்: சொத்தை விற்று பங்கு போட்டுக் கொண்டு, தன்னை கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு சொந்தமான வீடு மற்றும் 5 சென்ட் இடத்தை இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.



சொத்தை விற்பனை செய்த பிறகு மூதாட்டியை பிள்ளைகள் யாரும் கவனிக்காமல், எதிர்காலத்திற்கு தேவையான எந்த வழியும் செய்யாமல் மோசடி செய்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் தான் தற்போது சூசையாபுரத்தில் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள மூதாட்டி, மாவட்ட நிர்வாகம் முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்படி தனது சொத்துக்களை விற்று, தன்னை கவனிக்காமல் சென்ற பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...