சமீப காலமாக பெண் குழந்தைகள் மீது பாலீயல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையிக், குழந்தைகளுக்கு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான 'டாக்-ஷோ' கோவை Yi அமைப்பு நடத்துகிறது.

இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று Yi. அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது அமைப்பின் துணை தலைவர் பிரியதர்சினி கூறுகையில்: 'கடந்த இரண்டு ஆண்டுகாலமாக இந்த அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்தி வருகிறது. குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுக்க பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதனால், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 5ம் தேதி கிக்கானிக் பள்ளியில் நடக்கஉள்ளது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு பேச உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வுக்கு மசோம் என்று பெயரிடப்பட்டுள்ளது