கோவையில் தூய்மை பணியாளர்களுக்கான கண் மருத்துவ முகாம் - மாநகராட்சி ஆணையர் பிரதாப் துவங்கி வைத்தார்!

கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ சங்கரா கண்‌ மருத்துவமனை இணைந்து நடத்திய மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான கண்‌ மருத்துவ சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையர் பிரதாப் துவங்கி வைத்தார்.


கோவை: கோவையில் மாநகராட்சி சார்பில் நடைபெறும் கண்‌ மருத்துவ சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ துவக்கி வைத்தார்‌.

கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ சங்கரா கண்‌ மருத்துவமனை இணைந்து கண்‌ மருத்துவ சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பேசியதாவது, கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ சங்கரா கண்‌ மருத்துவமனை இணைந்து கோவை‌ வடக்கு மண்டல அலுவலக வளாகத்தில்‌ கோவை‌ மாநகராட்சியில்‌ பணிபுரிந்து வரும்‌ தூய்மை பணியாளர்களுக்கு வெளிச்சம்‌ திட்டத்தின் கீழ்‌ கட்டணமில்லா சிறப்பு கண்‌ சிகிச்சை மருத்துவ முகாம்‌ தொடங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில்‌ பணிபுரிந்து வரும்‌ 2,279 நிரந்தர தூய்மை பணியாளா்‌ மற்றும்‌ 4,097 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்‌, 623 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌, 494 ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ கிளீனர்கள் என‌ ஆகமொத்தம்‌ 7493 மாநகராட்சி பணியாளா்களுக்கு அவர்களின்‌ உடல்நலத்தை கருத்தில்‌ கொண்டு கட்டணமில்லா சிறப்பு கண்‌ சிகிச்சை மருத்துவ முகாம்‌ இன்று முதல்‌ நடத்தப்படுகிறது.



சங்கரா கண்‌ மருத்துவமனையை சார்ந்த 10 பேர்‌ கொண்ட மருத்துவக்குழு இப்பணியில்‌ ஈடுபட்டு வருகிறார்கள்‌. பார்வை பரிசோதனை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்‌ கண்ணாடியும்‌, அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை, தொடா்‌ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தொடா்‌ சிகிச்சையும்‌ இந்த கட்டணமில்லா சிறப்பு கண்‌ முகாமில்‌ வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக இன்று நடத்தப்படும்‌ மருத்துவ முகாமில்‌ 150 முதல்‌ 200 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. வடக்கு மண்டலத்தில்‌ பணியாற்றும்‌ சுமார்‌ 900 நபர்கள்‌ இந்த முகாமில்‌ பயன்பெறுவார்கள்‌. இத்திட்டத்திற்கு வெளிச்சம்‌ என பெயரிடப்பட்டுள்ளது.

அனைவரும்‌ இந்த கண்‌ சிகிச்சை மருத்து முகாமினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. மாநகராட்சி முழுவதும்‌ உள்ள 100 வார்டுகளிலும்‌ வெளிச்சம்‌ திட்டம்‌ படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.‌ இதன் மூலம் சுமார்‌ 8,000 நபர்கள்‌ பயன்பெறுவார்கள்‌.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...