தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி பெண் படுகாயம்

கோவை தொண்டாமுத்தூர் தென்னமநல்லூர் அருகேயுள்ள ராசு கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் பத்மா(47).அவரை காட்டு யானை தாக்கி படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கோவை: தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி பெண் படுகாயமடைந்தார்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை, தென்னநல்லூர் அருகே உள்ள ராசு கவுண்டர் தோட்டத்தில் நின்று அங்கு வீட்டிலிருந்த அரிசி மூட்டை வெளியே சாப்பிட்டது.

சத்தம் கேட்டு, வெளியே பத்மா (47) என்பவர் பார்த்தபோது, திடிரென காட்டு யானை அவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதையடுத்து அங்கிருந்த யானையை வனத்துறை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே நரசிபுரம் வெள்ளிமலை பட்டிணம்வடக்கலூர் பகுதிகளில் மற்றொரு காட்டு யானை வழக்கமான நேரத்தில் வராமல் 8 மணிக்கு உலா வந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள் காட்டு யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வடக்கலூர் பகுதியில் காட்டு யானை உலா வந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...