கோவை மாநகராட்சியின் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா, மாநகராட்சியில் நடைபெற்ற கடந்த மூன்று கூட்டங்களில் பங்கேற்காததால் அவரது பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார். அடுத்த கூட்டத்தில் அவரது விளக்கத்தை தொடர்ந்து தகுதி நீக்கத்தை உறுதி செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: தொடர்ந்து 3 மாநகராட்சி கூட்டத்திற்கு வராத 97வது வார்டு பெண் கவுன்சிலர் நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகராட்சியில் 97வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நிவேதா. இவர் மாநகராட்சி கூட்டங்களுக்கு நிவேதா வருகை தருவது இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கவுன்சிலர் நிவேதா கடந்த ஜனவரி 30, மார்ச் 31-ந் தேதிகளிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது.
தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்து கொள்ளாததால் கவுன்சிலர் நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.
அடுத்த கூட்டத்தில் தகுதி நீக்கம் குறித்து மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கவுன்சிலர் நிவேதா அளிக்கும் விளக்கத்தை மாநகராட்சி கூட்டம் ஏற்றுக்கொண்டு, ஒருமனதாக அனுமதி அளித்தால் அவர் கவுன்சிலராக பதவி நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இல்லாவிட்டால் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகிவிடும். மாநகராட்சி சட்டம் 1998 பிரிவு 32 (1)-ன் படி 3 கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளாவிட்டால் தகுதி நீக்கம் செய்ய அனுமதி அளிக்கிறது.
அதேநேரம் சட்டப்பிரிவு 32 (4) தகுதி நீக்கத்தை இறுதி செய்வது மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அளிக்கிறது.
கோவை மாநகராட்சியில் 97வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நிவேதா. இவர் மாநகராட்சி கூட்டங்களுக்கு நிவேதா வருகை தருவது இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கவுன்சிலர் நிவேதா கடந்த ஜனவரி 30, மார்ச் 31-ந் தேதிகளிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது.
தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்து கொள்ளாததால் கவுன்சிலர் நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.
அடுத்த கூட்டத்தில் தகுதி நீக்கம் குறித்து மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கவுன்சிலர் நிவேதா அளிக்கும் விளக்கத்தை மாநகராட்சி கூட்டம் ஏற்றுக்கொண்டு, ஒருமனதாக அனுமதி அளித்தால் அவர் கவுன்சிலராக பதவி நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இல்லாவிட்டால் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகிவிடும். மாநகராட்சி சட்டம் 1998 பிரிவு 32 (1)-ன் படி 3 கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளாவிட்டால் தகுதி நீக்கம் செய்ய அனுமதி அளிக்கிறது.
அதேநேரம் சட்டப்பிரிவு 32 (4) தகுதி நீக்கத்தை இறுதி செய்வது மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அளிக்கிறது.