கோவையில் தொடர்ந்து 3 மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்காத பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம்!

கோவை மாநகராட்சியின் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா, மாநகராட்சியில் நடைபெற்ற கடந்த மூன்று கூட்டங்களில் பங்கேற்காததால் அவரது பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார். அடுத்த கூட்டத்தில் அவரது விளக்கத்தை தொடர்ந்து தகுதி நீக்கத்தை உறுதி செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: தொடர்ந்து 3 மாநகராட்சி கூட்டத்திற்கு வராத 97வது வார்டு பெண் கவுன்சிலர் நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியில் 97வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நிவேதா. இவர் மாநகராட்சி கூட்டங்களுக்கு நிவேதா வருகை தருவது இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவுன்சிலர் நிவேதா கடந்த ஜனவரி 30, மார்ச் 31-ந் தேதிகளிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது.

தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்து கொள்ளாததால் கவுன்சிலர் நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.

அடுத்த கூட்டத்தில் தகுதி நீக்கம் குறித்து மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கவுன்சிலர் நிவேதா அளிக்கும் விளக்கத்தை மாநகராட்சி கூட்டம் ஏற்றுக்கொண்டு, ஒருமனதாக அனுமதி அளித்தால் அவர் கவுன்சிலராக பதவி நீடிக்க வாய்ப்பு உள்ளது.

இல்லாவிட்டால் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகிவிடும். மாநகராட்சி சட்டம் 1998 பிரிவு 32 (1)-ன் படி 3 கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளாவிட்டால் தகுதி நீக்கம் செய்ய அனுமதி அளிக்கிறது.

அதேநேரம் சட்டப்பிரிவு 32 (4) தகுதி நீக்கத்தை இறுதி செய்வது மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அளிக்கிறது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...