கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வனச் சரகங்களில் இன்று முதல் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வன சரகங்களில் இன்று முதல் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.

இந்த யானைகள் கணக்கெடுப்பு பணியில் வன சரகர்கள் தலைமையில் வனவர்கள் வனக்காப்பாளர் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட வன பணியாளர்கள் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணி மூன்று நாள் நடைபெறுகிறது. முதல் நாள் அட்டகட்டி பயிற்சி மையத்தில் வன பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பின் இன்று மானாம்பள்ளி வனச்சரகத்தில் வன சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் சிங்கோனா வனப்பகுதிக்குள் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாள் யானைகள் மற்றும் அதன் நடமாட்டம் உள்ள இடங்கள் நேரடியாக காண்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதையில் 2 கிமீ தூரம் சென்று கணக்கிடுவது 3வது நாள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் யானைகளை நேரடியாக கண்டு கணக்கிடுவது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.

இன்று முதல் மூன்று நாட்கள் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே நேரங்களில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவதாகவும் மூன்று நாட்கள் கணக்கெடுப்புக்கு பின் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வன சரகங்களில் இன்று முதல் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.
இந்த யானைகள் கணக்கெடுப்பு பணியில் வன சரகர்கள் தலைமையில் வனவர்கள் வனக்காப்பாளர் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட வன பணியாளர்கள் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணி மூன்று நாள் நடைபெறுகிறது. முதல் நாள் அட்டகட்டி பயிற்சி மையத்தில் வன பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பின் இன்று மானாம்பள்ளி வனச்சரகத்தில் வன சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் சிங்கோனா வனப்பகுதிக்குள் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
முதல் நாள் யானைகள் மற்றும் அதன் நடமாட்டம் உள்ள இடங்கள் நேரடியாக காண்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதையில் 2 கிமீ தூரம் சென்று கணக்கிடுவது 3வது நாள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் யானைகளை நேரடியாக கண்டு கணக்கிடுவது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.
இன்று முதல் மூன்று நாட்கள் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே நேரங்களில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவதாகவும் மூன்று நாட்கள் கணக்கெடுப்புக்கு பின் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.