மானாம்பள்ளி வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வனச் சரகங்களில் இன்று முதல் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வன சரகங்களில் இன்று முதல் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.



இந்த யானைகள் கணக்கெடுப்பு பணியில் வன சரகர்கள் தலைமையில் வனவர்கள் வனக்காப்பாளர் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட வன பணியாளர்கள் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணி மூன்று நாள் நடைபெறுகிறது. முதல் நாள் அட்டகட்டி பயிற்சி மையத்தில் வன பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பின் இன்று மானாம்பள்ளி வனச்சரகத்தில் வன சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் சிங்கோனா வனப்பகுதிக்குள் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.



முதல் நாள் யானைகள் மற்றும் அதன் நடமாட்டம் உள்ள இடங்கள் நேரடியாக காண்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதையில் 2 கிமீ தூரம் சென்று கணக்கிடுவது 3வது நாள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் யானைகளை நேரடியாக கண்டு கணக்கிடுவது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.



இன்று முதல் மூன்று நாட்கள் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே நேரங்களில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவதாகவும் மூன்று நாட்கள் கணக்கெடுப்புக்கு பின் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...