திருப்பூரில் 4வது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் - தண்ணீரை மலர் தூவி வரவேற்ற மேயர்!

திருப்பூர் மாநகரின் குடிநீர் பிரச்சனை தீர்க்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சோதனை ஓட்டத்தின் போது திருப்பூருக்கு கொண்டு வரப்பட்ட தண்ணீரை மேயர் தினேஷ்குமார் மற்றும் எம்.எல்.ஏ செல்வராஜ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.


திருப்பூர்: மேட்டுப்பாளையத்தில் இருந்து 4வது குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டத்தின் போது திருப்பூருக்கு வந்த தண்ணீரை மேயர் மற்றும் எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

திருப்பூர் மாநகரின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக் கூடிய வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் சோதனை ஓட்டம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த நிலையில் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு சோதனை ஓட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இது வெற்றிகரமாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமலை நகர் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு கொண்டு வரப்பட்டது.



இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். திட்டம் முழுமை அடையும் பட்சத்தில் திருப்பூர் மாநகர மக்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் மிகவும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...