பல்லடம் அருகே வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதம் - அரசு உதவ வேண்டும் என கோரிக்கை

பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட 2 கூலி தொழிலாளிகளின் குடும்பங்கள், தங்க இடமில்லாமல் தவித்து வருவதாகவும் அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை அடுத்த எம்ஜிஆர் நகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளியான கருப்பசாமி தனது மனைவி தேவி மற்றும் தனது மகனுடன் நான்கு வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் நகரில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை முதலே வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மாலை திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சூறைக்காற்றில் சிக்கி கருப்பசாமி வீட்டின் மேற்கூரை முழுவதுமாக தூக்கி வீசப்பட்டது. இதில் வீட்டின் உள்ளே இருந்த கருப்புசாமியின் மனைவி தேவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் மேற்கூரை சூறைக்காற்றில் சிக்கி தூக்கி எரியப்பட்டதில், மின்விசிறி, தொலைக்காட்சி, மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்தது.



வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் தங்குவதற்கு இடமின்றி கருப்பசாமியின் குடும்பத்தார் தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதேபோன்று கருப்பசாமியின் வீட்டிற்கு அருகேயுள்ள 2 ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.



சூறைக்காற்றில் சேதம் அடைந்த குடும்பத்தாருக்கு அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...