கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் பைக் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு

கோவை ரத்தினபுரியில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ் என்பவர், ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலக வேலை சம்பந்தமாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சாலையோரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது.

எங்கு தேடியும் கிடைக்காததால், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.



அதில், ஒரு இளைஞர், சுரேஷின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.



சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அந்த வீடியோவில் இருக்கும் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தை இளைஞர் திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...