கோவை வடக்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த மேயர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ மொத்தம்‌ ரூ.62.80 லட்சம்‌ மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேயர் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண.3க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.15 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அங்கன்வாடி மையம்‌ கட்டுமானப்பணியினையும்‌,



சின்னவேடம்பட்டி, அஞ்சுகம்‌ நகர்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.47.80 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 3 வகுப்பறைகள்‌, உணவுக்கூடம்‌, கூடுதல்‌ கழிவறைகள்‌ உள்ளிட்ட கட்டுமானப்பணியினையும்‌, ஆக மொத்தம்‌ ரூ.62.80 இலட்சம்‌ மதிப்பீட்டிலான கட்டுமானப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமி பூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்‌.



அதனைத்தொடாந்து, சின்னவேடம்பட்டி, அஞ்சுகம்‌ நகர்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்‌ பழுதடைந்த வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகளை உடனடியாக புனரமைத்து மாணவர்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்ட பின்னா்‌,



அப்பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையில்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உணவுப்பொருட்கள்‌ விநியோகம்‌ குறித்தும்‌, இருப்பு குறித்தும்‌ கேட்டறிந்தார்‌.

இந்நிகழ்ச்சியின்போது, வடக்கு மண்டலத்தலைவர்‌ கதிர்வேல்‌, மாமன்ற உறுப்பினர்‌ கவிதா, உதவி ஆணையர்‌ மோகன சுந்தரி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌, உதவி பொறியாளர்‌ உத்தமன்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...