கோவை நீலாம்பூர் அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது!

கோவை நீலாம்பூர் அருகே மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதை பொருள் விற்பனை செய்ய முயன்ற கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த வருண் (26), நந்தகிருஷ்ணா (21), மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த முகம்மது அரஷத் (20) ஆகிய மூவரையும் கைது செய்து ரூ.1.80 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: நீலாம்பூர் அருகே உயர் ரக போதைப்பொருளை கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் நடைபெற்று வரும் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர். இதில் சமீபகாலமாக மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதைப் பொருளை பெங்களூரிலிருந்து வாங்கி வரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோவையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் நேரடி கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு சந்தேகிக்கும் நபர்கள் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இவ்வாறு பெங்களூரிலிருந்து மெத்தபெட்டமைன் உயர் ரக போதைப் பொருளை வாங்கி வந்த சிலரை கண்காணித்து வந்த தனிப்படை போலீசார் நீலாம்பூர் அருகே அவர்கள் வந்த போது மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் உயர் ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த வருண் (26), நந்தகிருஷ்ணா (21), மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த முகம்மது அரஷத் (20) என்பதும், இவர்களில் நந்தகிருஷ்ணா, முகமது அரஷத் இருவரும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இவர்கள் பெங்களூரிலிருந்து போதைப் பொருட்களை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.



இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 60 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...