திருப்பூரில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் கனிம வள இயக்குனர் பணியிலிருந்து வள்ளலை விடுவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் கனிம வள உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த வள்ளல் என்பவர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நிலையில், அதனை அமல்படுத்தாத உதவி இயக்குனர் வள்ளலை பணியில் இருந்து விடுவித்து கூடுதல் பொறுப்பாக சச்சின் ஆனந்த் என்பவரை நியமனம் செய்தார்.

இதனை வரவேற்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நிலையில், அதனை அமல்படுத்தாத உதவி இயக்குனர் வள்ளலை பணியில் இருந்து விடுவித்து கூடுதல் பொறுப்பாக சச்சின் ஆனந்த் என்பவரை நியமனம் செய்தார்.
இதனை வரவேற்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.