திருப்பூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை - 2 ஆயிரம் வாழை மரங்களும் நாசம்!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருப்பூர் அடுத்த மணியக்காரம்பாளையத்தில் வீசிய சூறைக்காற்று காரணமாக கணேசன் என்பவரின் தோட்டத்தில் 4 ஏக்கரில் பயிரிட்டிருந்த 2 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியும் நிலவியது. மழையின் போது பல்வேறு பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியது.

இந்நிலையில் மாவட்டத்தில் காலை 7 மணி நிலவரப்படி திருப்பூர் வடக்கு பகுதியில் 2 மி.மீ. குமார் நகர்ப் பகுதியில் 1 மி.மீ, திருப்பூர் தெற்கு பகுதியில் 13 மி.மீ, பல்லடம் ரோடு பகுதியில் 2 மி.மீ, ஊத்துக்குளியில் 12 மி.மீ, மடத்துக்குளத்தில் 5 மி.மீ, குண்டடத்தில் 6 மி.மீ, உப்பாறு அணைப்பகுதியில் 17 மி.மீ, உடுமலையில் 14.10 மீ.மீ, அமராவதி அணைப்பகுதியில் 16 மி.மீ, பல்லடத்தில் 3 மி.மீ என மொத்தம் 91.10 மி.மீட்டர் மழைப் பதிவானது.

இதன் சராசரி 4.55 மி.மீட்டர் ஆகும். இதற்கிடையே திருப்பூரை சேர்ந்த கணேசன் (59) என்பவர் நல்லூர் மணியக்காரம்பாளையத்தில் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வாழை பயிரிட்டிருந்தார். அனைத்து வாழைகளும் நன்கு விளைந்து குழை தள்ளிய நிலையிலிருந்தன.



சூறாவளிக் காற்றின் காரணமாக 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் வாழை மரங்களும் முறிந்து நாசமாகின.



இதன் மதிப்பு ரூ.14 லட்சம் எனத் தெரிவித்த கணேசன், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...