பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது - 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி!

பிளஸ்1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும், 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அதிகபட்சமாக கணக்கு பதிவியல் பாடத்தில் 995 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 940 பேரும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.



சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடைபெற்றது. இதில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது.

இதனை தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை வெளியான நிலையில், பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் 90.93 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 7,549 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ ஆகிய அரசு தேர்வுத்துறையின் இணையதளங்களில், மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணுக்கும், எஸ்எம்எஸ் வாயிலாக மதிப்பெண் விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் ஏராளமான மாணவர்கள் பல்வேறு பாடங்களில் செண்டம் எனப்படும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

அதன்படி, தமிழ் பாடத்தில் 9 பேரும், ஆங்கிலம் பாடத்தில் 13 பேரும், இயற்பியல் பாடத்தில் 440 பேரும், வேதியியல் பாடத்தில் 107 பேரும், உயிரியல் பாடத்தில் 65 பேரும், கணிதம் பாடத்தில் 17 பேரும், தாவரவியல் பாடத்தில் 2 பேரும், விலங்கியல் பாடத்தில் 34 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 940 பேரும்,

வணிகவியல் பாடத்தில் 214 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 995 பேரும், பொருளியல் பாடத்தில் 40 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 598 பேரும், வணிக கணிதம், புள்ளியியல் பாடத்தில் 132 பேரும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...