10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 97.67 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கணித பாடத்தில் 3,649 பேர் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.



சென்னை: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில், மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 மாணவ, மாணவியர் எழுதினர்.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 9,14, 320 மாணவ மாணவிகளில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், எப்போதும் போலவே இந்தாண்டும் தேர்ச்சி சதவீதத்தில் மாணவர்களை விட மாணவிகள் 6.5 சதவீதம் அதிகம்.

இந்நிலையில், இந்த தேர்வில், ஆங்கிலம் பாடத்தில் 89 பேரும், கணிதம் பாடத்தில் 3,649 பேரும், அறிவியல் பாடத்தில் 3,584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், மொழிப்பாடத்தில் யாரும் 100சதவீத மதிப்பெண்களை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக 97.67 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2ஆம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 96.22 சதவீத தேர்ச்சியுடன் 3ஆம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 95.99 சதவீத தேர்ச்சியுடன் 4ஆம் இடத்திலும், மேலும் தூத்துக்குடி மாவட்டம் 95.58 சதவீத தேர்ச்சியுடன் 5ஆம் இடத்திலும் உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத்தேர்வு வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...