அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் - எஸ்.பி.வேலுமணி உறுதி!

கோவை அருகே கரடிமடை பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை நடைபெறுவது குறித்து தட்டிக்கேட்ட அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை: கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை கரடிமடை பகுதியில் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் திமுகவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



இந்நிலையில் தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி, செல்வராஜ் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,



கோவையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது.

குறிப்பாக கோவை கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், டாஸ்மாக்கில் மதுவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து கேள்வி கேட்டதற்காக, அந்த டாஸ்மாக்கை நடத்தும் திமுகவை சேர்ந்த ராகுல், கோகுல் ஆகியோர் தாக்கியதில் அவர் பலியாகியுள்ளார்.

இவ்வளவு தைரியாமாக இந்த கொலையை நிகழ்த்தி உள்ளதாகவும் இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு காவல்துறை ஆதரவாக உள்ளது. கோவையில் கள்ளதனமாக மதுவிற்பனையை தடுக்காத காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனித்தீர்மானம் கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...