அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் - எஸ்.பி.வேலுமணி உறுதி!

கோவை அருகே கரடிமடை பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை நடைபெறுவது குறித்து தட்டிக்கேட்ட அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை: கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை கரடிமடை பகுதியில் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் திமுகவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



இந்நிலையில் தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி, செல்வராஜ் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,



கோவையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது.

குறிப்பாக கோவை கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், டாஸ்மாக்கில் மதுவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து கேள்வி கேட்டதற்காக, அந்த டாஸ்மாக்கை நடத்தும் திமுகவை சேர்ந்த ராகுல், கோகுல் ஆகியோர் தாக்கியதில் அவர் பலியாகியுள்ளார்.

இவ்வளவு தைரியாமாக இந்த கொலையை நிகழ்த்தி உள்ளதாகவும் இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு காவல்துறை ஆதரவாக உள்ளது. கோவையில் கள்ளதனமாக மதுவிற்பனையை தடுக்காத காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனித்தீர்மானம் கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...