கோவை மத்திய சிறையில் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு பாராட்டு விழா!

கோவை மத்திய சிறையில் அரசு பொதுத் தேர்வில் 10ஆம் வகுப்பில் 2 பெண்கள் உட்பட 47 சிறைவாசிகளும் மற்றும் 12ஆம் வகுப்பில் 12 சிறைவாசிகளும் பொதுத் தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களுக்கு இன்று சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.


கோவை: கோவை மத்திய சிறையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மற்றும் தடுப்பு காவல் என சுமார் 2,300க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு கல்வி, யோகா, தியானம், தொழிற்பயிற்சி போன்ற பல்வேறு வகையான மறுவாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பில் இரண்டு பெண் உட்பட 47 சிறைவாசிகளும் மற்றும் 12ஆம் வகுப்பில் 12 சிறைவாசிகளும் பொதுத் தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

அவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக கோவை சரக சிறை துறை துணை தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா, தலைமையில், தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.



தொடர்ந்து இன்னர் வீல் கிளப் சார்பாக சிறை மருத்துவமனைக்கு வீல் சேர் ஒன்றும், ஸ்டீல் கட்டில் ஒன்றும் சிறை நூலகத்திற்கு 45 புத்தகங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இவ்விழாவின் போது செந்தமிழ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கனகசுப்ரமணியம் மற்றும் இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் (தெற்கு) தலைவி சுதா, கோதை நாயகம், சுமதி, திரிபுரசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...