பொள்ளாச்சி அருகே பட்டியலினப் பெண்கள் மீது தாக்குதல் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

பொள்ளாச்சி அருகே தன்னையும், தாயையும் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோமங்கலம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின பெண் புகார் அளித்துள்ளார். பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சீ மலையாண்டிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக். இவரது மனைவி சீதாலெட்சுமி. கடந்த ஒரு மாதமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீதாலட்சுமி, கணவர் கார்த்திக் இருவரும் சேர்ந்து சுய உதவிக் குழுவில் ரூபாய் 50,000 கடன் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், குழுவில் பெற்ற கடன் தொகையை கேட்டு நல்லாம்பள்ளியை சேர்ந்த துளசிமணி அவரது கணவர் மருதமுத்து உள்ளிட்ட சிலர் சீதாலட்சுமியிடம் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது இதேபோல் நேற்று அங்கு வந்த அவர்கள் , சீதாலட்சுமியிடம் பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அப்போது இரு தரப்பு பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்த மருதமுத்து, சீதாலட்சுமி மற்றும் அவரது தாயார் முருகம்மாள் உள்ளிட்ட இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டியிலின பெண்கள் மீது மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் நடத்திய இந்த தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினர், தமிழகத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் முறையாக வழக்குகள் பதிவு செய்வதில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக பட்டியலின பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...