கேரள ரயிலில் போதைப் பொருள் கடத்தல் - கோவையில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

கேரளாவில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: கேரளாவில் இருந்து கோவை வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக கோவை ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை ரயில் நிலையம் வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் ஏறி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அங்கு பொதுஜன பெட்டியில் இருந்த கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையை எடுத்து சோதனை செய்தபோது, அதில் மூன்று பண்டல்களில் சுமார் 3.492 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இது குறித்து அந்த பெட்டியில் வந்த பயணிகளிடம் போலீசார் கேட்டபோது, அது தொடர்பான விவரம் யாருக்கும் தெரியாத நிலையில், அங்கிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...