கோவை பீளமேடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, பணம் திருட்டு

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலை விஸ்வேஸ்வரா நகரை சேர்ந்தவர் சஜித் (40). இவர் கடந்த 18ஆம் தேதி கேரளா சென்ற நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.


கோவை: சரவணம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலை விஸ்வேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுரேந்தர் மகன் சஜித் (40). இவர் கோச்சிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி சஜித், தனது வீட்டை பூட்டி, சாவியை தன தந்தையிடம் கொடுத்துவிட்டு, சொந்த ஊரான கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து சஜித்தின் தந்தை சுரேந்தர் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை சென்று பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்த அவர் உடனடியாக தனது மகன் சஜித்திற்கு தகவல் அளித்தார். பின்னர் அவர் வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பிரோவை உடைத்து அதில் இருந்த ஏழு பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சஜித் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...