கோவையில் 10 நாளாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவோடு சுற்றிய நாய்.. தன்னார்வ அமைப்பு செய்த பேரூதவி!

கோவை பீளமேடு அடுத்துள்ள சேரன் மாநகர் பகுதியில் உள்ள குமுதம் நகரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றித்திரிந்த நாய், விலங்குகள் நல தன்னார்வ அமைப்பின் உதவியோடு இன்று மீட்கப்பட்டுள்ளது. நாயின் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் டப்பாவும் அகற்றப்பட்டது.


கோவை: பீளமேடு அருகே பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றி திரிந்த நாய் 10 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

கோவை பீளமேடு அடுத்துள்ள சேரன் மாநகர் பகுதியில் உள்ள குமுதம் நகரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் நாயின் கழுத்தில் மாட்டிக் கொண்டது.



இதனால் அந்த நாய் உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் அவதிப்பட்டு வந்தது. நாயை மீட்பதற்காக இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர்.

ஆனால் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் இன்று காலை The Planetic Foundation என்ற தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் அங்கு வந்தனர்.

அப்போது குமுதம் நகர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சோர்வாக நாய் படுத்திருந்தது.



குடியிருப்பு வாசிகளின் உதவியோடு, லாவகமாக நாயை பிடித்த குழுவினர், அதன் தலையில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து நாயை காப்பாற்றினர்.



இலவசமாக இந்த சேவையை செய்து வரும் தன்னார்வ அமைப்புக்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியோடு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.



பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கி எறிவதன் விளைவு தான் இது என கூறிய தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...