வால்பாறையில் பெண் சிறுத்தை உயிரிழப்பு - 2 சிறுத்தைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்திருக்கலாம் என தகவல்!

வால்பாறை அடுத்த சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். அதில், சிறுத்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: வால்பாறை அருகே சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், சிறுத்தை உயிரிழந்ததை உறுதி செய்தனர்.



பின்னர், ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் பார்கவேதேஜா உத்தரவின் பேரில், வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் உதவி வன பாதுகாவலர் செல்வம், மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், சேக்கல்முடி எஸ்டேட் மேலாளர் துருபாக்யோதி ஆகியோர் முன்னிலையில் சிறுத்தையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது.



பின்னர் ஆய்வக பரிசோதனைக்காக உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.



முடிவில் சிறுத்தையின் உடல் தீயிட்டு சம்பலாகும் வரை எரியூட்டப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுத்தை சுமார் 6 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை எனவும், மற்ற சிறுத்தைகளுடன் சண்டையிட்டு இருந்திருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...