வால்பாறை ஜமாபந்தியில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு!

வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவிற்கிணங்க வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) செல்வசுரபி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 45 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.



கோவை: வால்பாறையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 45 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கிணங்க வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) செல்வசுரபி தலைமையில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், வட்டாட்சியர் அருள் முகம் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 



இதில் முதியோர் ஓய்வூதியத்திற்காக 12 மனுக்களும், 33 பிறமனுக்களும் என மொத்தம் 45 மனுக்கள் மனுதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிலையில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.



மீதமுள்ள மனுக்கள் உரிய பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...