ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்திற்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடக்கம்!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தலின் படி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்திற்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வன விலங்குகளின் கால் தடங்கள், கீறல்கள், எச்சங்கள், பதிவு செய்து கணக்கெடுக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்துக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி, மற்றும் உடுமலை, அமராவதி என உள்ளிட்ட 6 வன சரகங்கள் உள்ளன. இதில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை மற்றும் அரிய வகையான பறவைகளும் என பலதரப்பட்ட வனவிலங்குகள் உள்ளன.

ஆண்டுதோறும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டுக்கான மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் பொள்ளாச்சி வனக்ககோட்டத்திற்கும் உடுமலை வனக்கோட்டத்திற்கும் உட்பட்ட 6 வனச்சரகங்களில் 115 நேர்கோட்டுப் பாதை அமைக்கப்பட்டு 460 வனத்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பணியில், வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கணக்கெடுப்பு பணியில், மாமிச உண்ணி, தாவர உண்ணி சார்ந்த வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள், நகக்கீறல்கள், நேரடிப் பார்வை என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுப்படி மொபைல் போன் ஜிபிஎஸ் மூலம் பதிவு செய்து கணக்கெடுக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

8 நாட்கள் நடைபெறும் இந்த வனவிலங்கு கணக்கெடுப்பில் முதல் நாள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்களுக்கு அட்டகட்டி பயிற்சி மையத்தில் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு மாமிசம் மற்றும் தாவர உண்ணி வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் மீதமுள்ள மூன்று நாட்களுக்கு வனவிலங்குகளுக்கு தேவையான தாவரங்கள் ஆகியவை கணக்கிடப்படுகிறது.



இவை அனைத்தும் பதிவு செய்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலருமான ராமசுப்ரமணியன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் நடைபெறும் வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பது வழக்கம் ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வரும் கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...