உதகை செல்ல முடியாமல் தவிக்கும் பொது மக்கள் - போதிய அரசு பேருந்து வசதி இல்லை என குற்றச்சாட்டு

கோடை விடுமுறையில் ஏராளமான மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், சாய்பாபா கோயில் பகுதியில் இருந்து உதகைக்கு போதிய அரசு பேருந்து வசதி இல்லாததால், சுற்றுலா பயணிகள் பலரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.



கோவை: சாய்பாபா கோவில் பகுதியில் இருந்து உதகைக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். 

குழந்தைகளுக்கு பள்ளிகள் விடுமுறை என்பதாலும் கோடை வெயில் அதிகமாக இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் உதகை மற்றும் கோத்தகிரி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சாய்பாபா கோயில் பகுதியில் இருந்து அரசு பேருந்து கோவையில் இருந்து உதகை செல்கிறது. 



இதனிடையே போதிய அரசு பயணிகள் பேருந்து இல்லாததால் உதகைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அரசு பேருந்து இயக்கப்படுகிறது என கூறுகின்றனர். 



ஆனால் ஒரு மணி நேரம் காத்திருந்தும், அரசு பேருந்து வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அங்கு பயணிகள் பேருந்து வந்தவுடன் அங்குள்ள பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு அந்த வண்டியில் ஏறுவது வாடிக்கையாகி வருகிறது. 



இதனால் அதிகமான அரசு பேருந்துகளை உதகைக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...