விவசாயத்துக்கு மட்டும் நிலம் கிடையாது எனவும், ஹைட்ரோ கார்பன் எடுக்க பைப் நடுவதன் மூலம் புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் எனவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் எரிவாயு உள்ளிட்டவைகளை சொந்த நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையை புதிய தமிழகம் கட்சி ஏற்று கொள்கிறது என கூறினார்.
மேலும், ஹைட்ரோ கார்பன் எடுக்க குழாய்கள் நடுவதன் மூலமாக புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் எனவும், அப்படி வந்தால் பெட்ரோல், டீசல் எடுக்கும் அரேபிய நாடுகளில் உள்ளவர்கள் எல்லோரும் செத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தற்போது போராட்டம் நடத்துபவர்களின் கோரிக்கையே சரியல்ல என கூறிய அவர், விவசாயத்துக்கானது மட்டும் நிலம் கிடையாது எனவும், இந்தியாவில் எங்கும் பெட்ரோல் டீசல் எடுக்க கூடாது என்றால் எங்கு சென்று வாங்குவது எனவும் கேள்வி எழுப்பினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்த கூடாது என்றால் வாகனங்களை எப்படி ஓட்டுவது, மேக்கின் இந்தியா திட்டம் என்ன என கூறிய அவர், இருக்கிற இடத்தில் தான் அவற்றை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வு குறித்து பேசிய அவர், கடந்த 50 ஆண்டு காலத்தில் பள்ளி கல்வியை மேம்படுத்தாததன் காரணமாகவே தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டிய நிலை உள்ளதாக கிருஷ்ண சாமி அப்போது கூறினார்.
கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் எரிவாயு உள்ளிட்டவைகளை சொந்த நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையை புதிய தமிழகம் கட்சி ஏற்று கொள்கிறது என கூறினார்.
மேலும், ஹைட்ரோ கார்பன் எடுக்க குழாய்கள் நடுவதன் மூலமாக புற்றுநோய் வரும் என்பது முட்டாள் தனம் எனவும், அப்படி வந்தால் பெட்ரோல், டீசல் எடுக்கும் அரேபிய நாடுகளில் உள்ளவர்கள் எல்லோரும் செத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தற்போது போராட்டம் நடத்துபவர்களின் கோரிக்கையே சரியல்ல என கூறிய அவர், விவசாயத்துக்கானது மட்டும் நிலம் கிடையாது எனவும், இந்தியாவில் எங்கும் பெட்ரோல் டீசல் எடுக்க கூடாது என்றால் எங்கு சென்று வாங்குவது எனவும் கேள்வி எழுப்பினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்த கூடாது என்றால் வாகனங்களை எப்படி ஓட்டுவது, மேக்கின் இந்தியா திட்டம் என்ன என கூறிய அவர், இருக்கிற இடத்தில் தான் அவற்றை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வு குறித்து பேசிய அவர், கடந்த 50 ஆண்டு காலத்தில் பள்ளி கல்வியை மேம்படுத்தாததன் காரணமாகவே தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டிய நிலை உள்ளதாக கிருஷ்ண சாமி அப்போது கூறினார்.